கொரோனா கட்டுப்பாடுகளுடன் அம்பேத்கர், பாபுஜி பிறந்த நாள் கொண்டாட அனுமதி

கோலார்: கொரோனா கட்டுப்பாடுகளுடன் அம்பேத்கர் மற்றும் பாபு ஜெகஜீவன்ராம் ஆகியோரின் பிறந்த நாளை கொண்டாட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கர் மற்றும் பாபு ஜெகஜீவன்ராம் ஆகியோரின் பிறந்த நாள் விழா கொண்டாடுவது குறித்து சமூகநலம் மற்றும் கல்வி துறை அதிகாரிகளுடன் கலெக்டர் ஆர்.செல்வமணி ஆலோசனை நடத்தினார். அப்போது கலெக்டர் பேசும்போது, “ சமூகத்திற்கு சேவை செய்த மகான்களின் பிறந்த நாளை கொண்டாடுவதும், அவர்களின் சாதனைகளை வருங்கால சந்ததினருக்கு எடுத்து கூற வேண்டியது அனைவரின் கடமையாகும். அதே சமயத்தில் கொரோனா தொற்று பரவல் காரணமாக மாநில அரசு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இரு மகான்களின் பிறந்த நாள் விழாவை பள்ளி, கல்லூரிகளில் போட்டிகள் நடத்துவதன் மூலம் கொண்டாட வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பியூசி இரண்டாமாண்டு இறுதி தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்துள்ள மாணவர்களை அழைத்து கவுரவிக்க வேண்டும். கிராம பஞ்சாயத்து வட்டத்தில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பெயரில் பவன்கள் அமைக்க வேண்டும். கிராமம், தாலுகா, மாவட்ட பஞ்சாயத்து அலுவலகங்கள், நகர உள்ளாட்சி அமைப்பு அலுவலகங்களில் பிறந்த நாள் விழா கொண்டாட வேண்டும் என்று உத்தரவிட்டார்….

Related posts

ஹத்ராஸ் நெரிசலில் சிக்கி 123 பேர் உயிரிழந்த சம்பவத்தில் சாமியாரின் உதவியாளர் கைது

121 பேரை பலி கொண்ட விபத்து ஹத்ராஸில் ராகுல் காந்தி நேரில் ஆறுதல்

கேரளாவில் பரவும் காய்ச்சல் 310 பன்றிகளை கொல்ல முடிவு