அவிநாசி : அவிநாசி தாலுகாவுக்கு உட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில், தினமும் 150க்கும் மேற்பட்ட நில விற்பனை, திருமண பதிவு உள்ளிட்ட பல்வேறு பத்திரப் பதிவு மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் நேற்று பவுர்ணமி மற்றும் முகூர்த்த நாளானதால் பத்திரபதிவுக்காக 200 டோக்கன் விநியோகிக்கப்பட்டது. இதனால் பத்திரப்பதிவு அலுவலகத்தில் மக்கள் முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல், ஒரு பத்திர பதிவுக்கு 10 பேர் முதல் 20 பேர் வரை குவிந்ததால் நெருக்கடிக்கு ஆளாகினர். இதனால், ெகாரோனா நோய் தொற்று பலருக்கும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர். ஆகவே கிருமிநாசினி தெளிப்பது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது உள்ளிட்ட விதிமுறைகளை சார்பதிவாளர் அலுவலகத்தில் கடைப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மக்கள் கூட்டத்தை குறைக்க டோக்கன்களை குறைவாக வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது….
கொரோனா அச்சத்தை மீறி அவிநாசி சார்பதிவாளர் அலுவலகத்தில் குவிந்த மக்கள்
previous post