Thursday, June 27, 2024
Home » கொரோனாவை தடுப்பதற்கு முகக்கசவம் மிக பலமான ஆயுதம் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு தொற்றை சுலபமாக எதிர்கொள்ளலாம்: எந்தவிதமான பக்கவிளைவும் ஏற்படாது; டாக்டர் இளங்கோவன் தகவல்

கொரோனாவை தடுப்பதற்கு முகக்கசவம் மிக பலமான ஆயுதம் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு தொற்றை சுலபமாக எதிர்கொள்ளலாம்: எந்தவிதமான பக்கவிளைவும் ஏற்படாது; டாக்டர் இளங்கோவன் தகவல்

by kannappan

சென்னை:. தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு கொரோனா தொற்று வந்தால் சுலபமாக எதிர்கொள்ள முடியும் என்று டாக்டர் இளங்கோவன் கூறினார். இரண்டாம் அலை கொரோனா வைரஸின் தன்மை குறித்து எலும்பு முறிவு மருத்துவர் டாக்டர் இளங்கோவன் கூறியதாவது: வைரஸ் என்பது உயிர் மற்றும் உயிரி அல்லாத ஒன்றுக்கும் இடையில் இருப்பது, அதற்குள் ஆர்.என்.ஏ, டி.என்.ஏ இரண்டு கூறுகள் இருக்கிறது. இது இரண்டும் ஒரு உயிருக்குள் இருக்கக்கூடிய அடிப்படையான ஒன்று. அது இருந்தால்தான் அதை உயிரி என்று சொல்ல முடியும். ஆனால், இந்த வைரசால் தனியாக வாழ முடியாது. அது செல்லுக்குள்ளோ அல்லது இன்னொரு உயிரினத்தின் செல்லுக்குள்ளோ போய்தான் வாழ முடியும். இனப் பெருக்கத்தையும் உருவாக்க முடியும். சில சமயம் அது மிருகங்களோடு செல்லில் இருக்கலாம் அல்லது மனிதர்களின் செல்லில் இருந்து இனப்பெருக்கத்தை செய்யும். கொரோனா வைரசும் இதற்கு அப்பாற்பட்டது கிடையாது. இது மனிதனோட செல்லுக்குள் போனால்தான் உயிர் சத்தை எடுத்து இனப்பெருக்கம் செய்யும். கொரோனா வைரசை உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், இருமல், தும்மல் மூலம் பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அது கண்ணுக்கு தெரியாத வைரஸ். உப்பின் சால்ட் கிரைன் என்று சொல்லக்கூடிய துகளை விட 10 ஆயிரம் மடங்கு சிறியது. கண்ணுக்கு தெரியாத வைரஸ் என்பதால் எங்கு இருக்கிறது, எப்படி பரவுகிறது என்பதை கூற முடியாது. அதனால்தான் அந்த துகள் கூட நுளைய முடியாத அளவுக்கு முகக்கவசம் அணிய வேண்டும். அந்த துகள் மிகவும் சிறியதாக இருப்பதால் முகக்கவசத்தில் இருக்கக்கூடிய துளைகள் மூலமாக புகுந்துவிட முடியும். எனவேதான் இரண்டு மாஸ்க் போட சொல்கிறோம்.இரண்டாம் அலையில் சார்ஸ் கோவிட்-2 உருமாற்றம் அடைந்து எதிரியின் எதிர்ப்பு சக்திக்கு ஏற்ற மாதிரி தன்னை உருமாற்றிக் கொண்டது.  இந்த வைரஸ் மூக்கு, வாய் வழியாக உள்ளே சென்று சீக்கிரமாக பரவும் தன்மை கொண்டது. இதனால் பாதிப்பு பல மடங்காக இருக்கிறது. உருமாறிய கொரோனா தொண்டை வரை மட்டும் செல்லாமல் நுரையீரலை வேகமாக பாதிக்கிறது. இதனால்தான் உயிரிழப்புகள் அதிகமாக இருக்கிறது. தொண்டைக்குழாயில் இருந்து நுரையீரலுக்கு போவதற்கு முன்பே  தலைவலி, காய்ச்சல், மூக்கு அடைப்பு, சுவை இல்லாமல் இருத்தல் போன்ற அறிகுறிகள் இருக்கும் போது சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி சிகிச்சை எடுத்துக் கொண்டால் நுரையீரலுக்கு போவதற்கு வாய்ப்பு இல்லை. முதல் 4-5 நாட்கள் வரை கிருமிகள் தொண்டையில் தான் இருக்கும். அதன்பிறகு தான் நுரையீரலுக்கு செல்லும். எனவே முதல் 5 நாட்களுக்குள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு 5 நாட்கள் முதல் 7 நாட்களுக்குள் நுரையீரலுக்கு சென்றடையும். நுரையீரலுக்கு சென்ற பிறகு நோய் எதிர்ப்பு சக்தியின் தன்மைக்கு ஏற்றவாறு மாறுபடும். அதாவது, நீரிழிவு நோய், இதயநோய் உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாறுபடும், வைரசின் வீரியத்தை பொறுத்து மாறுபடும். ஆக்சிஜன் அளவு குறைவதற்கு காரணம் கொரோனாவின் பாதிப்பு அதிகமாக இருப்பதே. நுரையீரல் பாதிப்பும் அதிகமாக இருப்பதால் ஆக்சிஜன் அதிகம் தேவைப்படுகிறது. ஆக்சிஜன் அளவை பல்ஸ் ஆக்ஸ்மீட்டர் வைத்து பார்க்கின்றனர். பல்ஸ் ஆக்ஸ் மீட்டர் கையில் மாட்டிக்கொண்டு நடந்து செல்லும் போது ஆக்சிஜன் அளவு குறைந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். ஆக்சிஜன் இல்லாத காலக்கட்டத்தில் வீட்டில் இருந்து சிகிச்சை பெறக்கூடாது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மக்களிடையே விழிப்புணர்வு இருக்க வேண்டும். தற்போது முதல் அலையைவிட இரண்டாவது அலையில் மக்களிடையே விழிப்புணர்வு அதிகம் உள்ளது. முகக்கவசம் கட்டாயம் போட வேண்டும். கோவி ஷீல்டு, கோவாக்சின் இரண்டு தடுப்பூசியுமே சிறந்தது. முதல் டோஸ் போட்டுக் கொண்ட பிறகு 6- 8 வாரம் வரை நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் இரண்டாவது டோஸ் போடும் காலம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் பலன் வாழ்நாள் முழுவதும் இருக்காது. ஒரு வருடம் அல்லது இரண்டு வருடம் இருக்கும் என்கின்றனர். வாழ்நாள் முழுவதும் இருப்பதற்கு வாய்ப்பு குறைவு. இந்த வைரஸ் உருமாறும் தன்மை கொண்டது. எனவே உருமாறும் போது எதிர்ப்பு சக்திக்கு போட்டுக் கொண்ட வேக்சின் பாதுகாக்காது. ஏற்கனவே கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் 2-3 மாதங்கள் கழித்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசிபோடும் போது ஒவ்வாமை இருந்தால் சில நேரங்களில் பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் தடுப்பூசி பாதுகாப்பானவை தான். இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் முகக்கவசம் அணியாமல் இருக்கின்றனர். அது முற்றிலும் தவறானது. கொரோனாவை தடுப்பதற்கு முகக்கசவம் ஒரு வகை ஆயுதம். தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு கொரோனா தொற்று வந்தால் சுலபமாக எதிர்கொள்ள முடியும், உயிாிழப்பும் குறைவாக இருக்கும். ஆனால் தடுப்பூசி போடாமல் கொரோனா தொற்று வந்தால் பாதிப்பு அதிகமாகத்தான் இருக்கும். தடுப்பூசி போட்டுக் கொண்டால் எந்தவிதமான பக்கவிளைவும் ஏற்படாது, 99.9 சதவீதம் மிகவும் பாதுகாப்பானது. எனவே, பொதுமக்கள் முகக்கவசம், சமூக இடைவெளி, கைகளை கழுவுதல் போன்றவற்றை முறையாக செய்தால் கொரோனாவை நிச்சயம் வெற்றி கொள்ள முடியும். இவ்வாறு அவர் கூறினார். தடுப்பூசியின் பலன் வாழ்நாள் முழுவதும் இருக்காது. ஒரு வருடம் அல்லது 2 வருடம் இருக்கும் என்கின்றனர். வாழ்நாள் முழுவதும் இருப்பதற்கு வாய்ப்பு குறைவு….

You may also like

Leave a Comment

five × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi