கொரோனாவுக்கு மூதாட்டி பலி எதிரொலி: அனுப்பர்பாளையத்தில் கிருமி நாசினி தெளித்து சுகாதார பணி தீவிரம்

திருப்பூர்,ஏப்.11: தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுபடுத்த மத்திய, மாநிலஅரசுகள் கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் வெள்ளகோவில் பகுதியில் கடந்த வாரம் முதியவர் ஒருவர் கொரோனா தொற்றால் பலியானார். இதனை தொடர்ந்து நேற்று முன் தினம் அனுப்பர்பாளையம் நேரு வீதி பகுதியில் மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இந்நிலையில்அனுப்பர்பாளையம் நேரு வீதியில் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பரவாமல் இருப்பதற்காக மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுகாதாரப்பணியினை மேற்கொண்டனர். மேலும், பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், உடல் வலி உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுருத்தினர்.

Related posts

சிவாய நம சிவாய நம விண்ணை பிளக்க நடராஜர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

தமிழகத்தில் 40 ஆயிரம் காவலர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும்

தம்பதியின் உறவினர்கள் 2 பேர் கைது