கொரோனாவுக்கு நடிகர் வெங்கட் சுபா மரணம்

சென்னை: நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் இன்று உயிரிழந்தார். கொரோனாவால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சினிமா பிரபலங்கள் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமா பிரபலங்களும் ஏராளமானவர்கள் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். அந்த வரிசையில் நடிகரும், சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நடிகர் வெங்கட் சுபா சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இது சினிமா பிரபலங்கள் இடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் வெங்கட் சுபா பல்வேறு சின்னத்திரை தொடர்கள், அழகிய தீயே, கண்ட நாள் முதல் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். தனது யூடியூப் சேனலில் சினிமா விமர்சனம் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது….

Related posts

மாநில கல்லூரியில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு லிப்ட் வசதியுடன் பிரத்யேக விடுதி: விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்: இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்