கொரோனாவில் இருந்து மீண்ட பாஜக எம்எல்ஏ மரணம்

சண்டிகர்: கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வீட்டில் ஓய்வெடுத்து வந்த இமாச்சல் பிரதேச பாஜக எம்எல்ஏ திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறலால் இறந்தார். இமாச்சல பிரதேசம் ஜுப்பால்-கோட்காயைச் சேர்ந்த நரிந்தர் பிராக்தா (69) கடந்த சில வாரங்களுக்கு முன் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில், அவருக்கு ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறலால் சண்டிகரில் உள்ள பிஜிஐஎம்இர் மருத்துவமனையில் காலமானார். இவர், இமாச்சல பிரதேச சட்டப் பேரவையில் பாஜகவின் தலைமை கொறடாவாகவும், இரண்டு முறை அமைச்சராகவும் இருந்தார். தற்போது பாஜக எம்எல்ஏவாக பதவி வகித்து வந்தார். இவரது மறைவு குறித்து அம்மாநில முதல்வர்  ஜெய் ராம் தாக்கூர் வெளியிட்ட இரங்கல் செய்தியில், ‘நரித்தர் பிராக்தாவின் மறைவு இமாச்சல் பிரதேச பாஜகவுக்கு பெரும் இழப்பு. தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்றி வந்த நேர்மையான தலைவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். அதேபோல், இமாச்சலின் முன்னாள் முதல்வர் பி.கே. துமலும், பிராக்தாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். …

Related posts

மும்பை செம்பூரில் வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு

மும்பையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழப்பு

நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து