கொரோனாவில் இருந்து நம்மை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும்: கமல்ஹாசன் அறிக்கை

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று விடுத்துள்ள அறிக்கை: அச்சம் இல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். சுற்றத்தாரை தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்துங்கள். நான் 2 தவணைகளை முடித்துவிட்டேன். அதனால் எனக்கு பாதிப்பு இல்லை. கொரோனா 2வது அலை குழந்தைகளையும் அதிகமாக பாதிக்கிறது. வீட்டில் குழந்தைகள் மற்றும் முதியோர் இருந்தால், அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள். கொரோனா தொற்று பெருநகரங்களில் அதிகமாக இருப்பதற்கு காரணம் நெருக்கடி்தான். சம வாய்ப்புள்ள நகரங்கள் மற்றும் தற்சாற்பு கிராமங்கள்தான் உலகமே செல்ல வேண்டிய திசை. உங்கள் தொழிலை, சேவையை, வேலைகளை சொந்த ஊரில் இருந்தே செய்ய முடியும் என்றால், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். அரசுகளால் ஒரு எல்லைக்கு மேல் நம்மை காக்க முடியாது என்பதே புள்ளிவிபரங்கள் காட்டும் உண்மை. உங்களை பாதுகாக்கும் பொறுப்பை உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள். கொரோனா பெருந்தொற்றில் இருந்து மக்களை காக்க யார் என்ன முயற்சி செய்தாலும், தயக்கம் இல்லாமல் அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுங்கள்….

Related posts

ராஜஸ்தான் மாநில வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரோடி லால் மீனா திடீர் ராஜினாமா

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்

ஆர்எஸ்எஸ் எப்போதும் அரசியலமைப்புக்கு எதிரானது: வெளிநடப்புக்கு பின் கார்கே விமர்சனம்