புதுடெல்லி: கொரோனாவால் பெற்றோரை இழந்து ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பிரதமர் மோடியை வலியுறுத்தி இருக்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இந்த கடிதத்தில் சோனியா கூறியிருப்பதாவது: கொரோனா நோய் தொற்றினால் பெற்றோரை இழந்த குழந்தைகள் அல்லது வருமானமீட்டும் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நவோதயா வித்யாலயா பள்ளிகள் மூலமாக இலவச கல்வி வழங்க வேண்டும். இது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். பெற்றோரை இழந்த இந்த குழந்தைகள் இழப்பின் அதிர்ச்சியில் இருக்கின்றனர். மிக துயரத்தினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு வலுவான எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அளிப்பதற்கு இந்த நாடு கடமைப்பட்டுள்ளது. இழப்பின் அதிர்ச்சியில் இந்த குழந்தைகள் எஞ்சியிருக்கின்றனர். அவர்களது எதிர்காலத்துக்கோ, கல்விக்கான ஆதரவோ இல்லாமல் இருக்கின்றனர். அவர்களுக்கு இலவச கல்வி வழங்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது….