கொடைக்கானல் அருகே பள்ளிக்கு சென்ற மாணவி பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை: உறவினர்கள் மறியல்

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே பள்ளிக்கு சென்ற மாணவி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலை அருகே பாச்சலூர் மலைக்கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, அப்பகுதியிலுள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை சிறுமி, அக்கா, தம்பியுடன் இப்பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கு சென்றார். மதிய உணவு இடைவேளையில் 3 பேரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது வழக்கம். ஆனால், நேற்று உணவு இடைவேளைக்கு சிறுமி வரவில்லை.இதையடுத்து, அக்கா மற்றும் தம்பி இருவரும் சேர்ந்து, சகோதரியை தேடினர். ஆசிரியர்கள், பெற்றோரிடமும் தகவல் தெரிவித்தனர். அதன்பிறகே மாணவியை உறவினர்களுடன் இணைந்து, பெற்றோரும் தேடி அலைந்தனர். அப்போது அந்த பள்ளிக்கு அருகில் உள்ள புதர் பகுதியில் நெருப்பு புகைவதைக் கண்டு ஓடிச் சென்று பார்த்தனர், அங்கு சிறுமி முகம் எரிந்த நிலையில், குற்றுயிராக உயிருக்கு போராடியபடி கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிறுமி அருகே பெட்ரோல் கேனும், தீப்பெட்டியும் கிடந்தது. உடனே பெற்றோர் அலறியடித்து சிறுமியை மீட்டு ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சிறுமியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்தவர்கள், ஆட்கள் வந்ததும் அப்படியே பெட்ரோல் கேன், தீப்பெட்டியை போட்டு விட்டு தப்பியதாக தெரிகிறது. தகவலறிந்து ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி சோமசுந்தரம், தாண்டிக்குடி போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தையும் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். தனிப்படை அமைத்து விசாரணை வேகப்படுத்தப்பட்டுள்ளது. கொலையாளி இதே பகுதியைச் சேர்ந்தவராகவே இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பள்ளிக்கு வந்த மாணவி கொலையாகி இருப்பதால், பள்ளி தலைமையாசிரியர், இரு ஆசிரியர்கள் என மூவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்யக் கோரி உறவினர்கள்,  கிராம மக்கள் பாச்சலூரில் மறியல் போராட்டம் செய்தனர். மாணவி எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

Related posts

நாம் தமிழர் கட்சி பிரமுகரின் முதல் கணவருக்கு வெட்டு; 2வது கணவர் உள்பட 4 பேர் கைது

சென்னை உள்பட பல இடங்களில் கைவரிசை; ஐடி அதிகாரிகள் போல நடித்து பணம் பறித்த 8 பேர் கும்பல் திருச்சி சிறையில் அடைப்பு

சென்னைக்கு சப்ளை செய்ய வனப்பகுதியில் வெட்டி கடத்திய ரூ.1.60 கோடி செம்மரம் பறிமுதல்: 4 பேர் கைது