கொடைக்கானலில் மது விற்ற 4 பேர் கைது

 

கொடைக்கானல், ஜூன் 14: கொடைக்கானல் எஸ்ஐ கிருஷ்ணகுமார் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, வில்பட்டி பகுதியில் மது விற்ற நாயுடுபுரத்தை சேர்ந்த ராஜ் (60), பெருமாள்மலை பகுதியில் மது விற்ற அடுக்கம் பகுதியை சேர்ந்த காளிமுத்து (45), பேத்துப்பாறை பகுதியில் மது விற்ற பண்ணப்பட்டியை சேர்ந்த ரவி (41), கொடைக்கானல் நகரில் மது விற்ற மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்த மணிரத்தினம் (27) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 33 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்