கொடைக்கானலில் சிக்னல் கம்பம் சாய்ந்து பலியானவருக்கு நிதியுதவி

கொடைக்கானல், ஜூன் 27: கொடைக்கானலில் நேற்று காலை சூறைக்காற்றுடன் பெய்த மழையின் காரணமாக பஸ் நிலையம் அருகே போக்குவரத்து சிக்னல் கம்பம் திடீரென்று சரிந்து விழுந்தது. இதில் கொடைக்கானல் அன்னை தெரசா நகரை சேர்ந்த தாஸ் (56), சின்னப்பள்ளம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (28) ஆகியோர் சிக்கி படுகாயமடைந்தனர். இதில் தாஸ் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பழநி தொகுதி எம்எல்ஏ ஐ.பி.செந்தில் குமார் பலியான தாஸின் குடும்பத்திற்கு உடனடியாக ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார். நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன் ஆகியோர் இறந்த தாஸின் குடும்பத்திற்கு எம்எல்ஏ சார்பிலான நிதி உதவியை வழங்கினர். மேலும் சிகிச்சையில் உள்ள சுரேஷிற்கும் நிதி உதவி வழங்கப்பட்டது.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை