கொடைக்கானலில் காட்டு மாடுகள் ‘மல்லுக்கட்டு’: பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம்

 

கொடைக்கானல், ஜூன் 26: கொடைக்கானலில் சமீப காலமாக வன விலங்குகளின் தொந்தரவு அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டு மாடுகள் கூட்டம், கூட்டமாக குடியிருப்பு பகுதிக்குள்ளும், சுற்றுலா தலங்களுக்கும் நுழைந்து பொதுமக்கள், சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்று கொடைக்கானல் ஏரி அருகே கீழ் பூமி பகுதியில் 2 காட்டு மாடுகள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதி கொண்டது.

சுமார் அரை மணிநேரம் ஆக்ரோஷமாக நடந்த இந்த சண்டையை கண்டு அவ்வழியே வந்த பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓடினர். மேலும் சிலர் காட்டு மாடுகளின் சண்டையை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளனர். எனவே கொடைக்கானல் நகர் பகுதிக்குள் ஊடுருவி பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சுறுத்தி வரும் காட்டு மாடுகளை வனப்பகுதிக்குள் நிரந்தரமாக விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

ரயில் நிலையத்தில் கடை வைத்து தருவதாக பாஜ நிர்வாகி ₹2.5 லட்சம் மோசடி பெண் தற்கொலைக்கு முயற்சி : கடிதம் எழுதி வைத்ததால் பரபரப்பு

போதையில் தங்கையை ஆபாசமாக திட்டியதால் ஆத்திரம்; மீன் பண்ணை ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை: உடன் பணியாற்றிய வாலிபர் கைது

சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வசூலிப்பு; மும்மடங்கு லாபம் தருவதாக கூறி 1,930 பேரிடம் ₹87 கோடி மோசடி: 25 பேர் ஏஜென்ட்டுகளாக செயல்பட்டது அம்பலம்