கொடிக்குறிச்சி கல்வியியல் கல்லூரியில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு

தென்காசி, செப்.18: தென்காசி கொடிக்குறிச்சி ராம் நல்லமணி யாதவா கல்வியியல் கல்லூரியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி நிறுவனர் மணிமாறன் தலைமை தாங்கினார். கணினி பேராசிரியை ஹையர் நிஷா வரவேற்றார். கல்லூரியின் தமிழ் பேராசிரியை பத்மாவதி மகாராஜன் முன்னிலை வகித்தார். சமூக சேவகர் மற்றும் தென்காசி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் நஜிமா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரசனைகள் அதனை எதிர்கொள்ளும் விதம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் குறித்து விரிவாக பேசினார். மாணவ மாணவியர்கள் தங்கள் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் அந்தோணி சகாயரூபன் செய்தpருந்தார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்