Monday, July 1, 2024
Home » கொடநாடு வழக்கில் கைதான ரமேசுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

கொடநாடு வழக்கில் கைதான ரமேசுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

by kannappan

ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான ஜெயலலிதா மாஜி கார் டிரைவர் ஆத்தூர் கனகராஜ் சாலை விபத்தில் பலியானார். இதனையடுத்து கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரிடம் போலீசார் மீண்டும் விசாரணை நடத்தினர். பின்னர் சாட்சியங்களை கலைத்தது, தடயங்களை அழித்தது உட்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் இருவரும் கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் ரமேசிற்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் முதலில் கூடலூர் அரசு மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். …

You may also like

Leave a Comment

8 + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi