Saturday, July 6, 2024
Home » கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் கார் டிரைவரிடம் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஜெயலலிதாவின் கார் டிரைவரிடம் விசாரணை

by kannappan

கோவை: நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களாவில் கடந்த 2017ல் நடந்த கொலை, கொள்ளை தொடர்பான விசாரணை மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை சசிகலா உள்பட 230க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர். மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான போலீசார் மணல் சப்ளையர் ஓ. ஆறுமுகசாமி மற்றும் அவரது மகன் செந்தில்குமாரிடம் சில தினங்களுக்கு முன்பு விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவல் அடிப்படையில் சென்னையை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளர் நவீன் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், நவீன் பாலாஜியிடம், சசிகலா பிரமாண்டமான ரிசார்ட் ஒன்றை விலைக்கு வாங்கியது தெரியவந்தது. அவரிடம் கொடநாடு பங்களாவில் இருந்த ஆவணங்கள் மாயமானது குறித்தும் விசாரிக்கப்பட்டது. கோவை கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறுக்குட்டியிடம் தனிப்படை போலீசார் 3 நாள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் குணசேகரன் என்பவரிடம் போலீஸ் ஐஜி சுதாகர் தலைமையில் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது வாகன விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த கனகராஜ் குறித்தும், கொடநாடு பங்களாவில் இருந்து காணாமல்போன ஆவணங்கள் குறித்தும் குணசேகரிடம் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தினர்….

You may also like

Leave a Comment

12 + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi