Monday, September 9, 2024
Home » கொடநாடு கொலைக்கு காரணமானவர் ; 2024ல் எடப்பாடி ஜெயிலில் இருப்பார்: ஈவிகேஎஸ். இளங்கோவன் பேச்சு

கொடநாடு கொலைக்கு காரணமானவர் ; 2024ல் எடப்பாடி ஜெயிலில் இருப்பார்: ஈவிகேஎஸ். இளங்கோவன் பேச்சு

by kannappan

ஆலந்தூர்: கொட நாடு கொலைக்கு காரணமான எடப்பாடி பழனிசாமி, 2024ம் ஆண்டு சிறையில் இருப்பார் என்று இளங்கோவன் பேசினார். சென்னை ஆலந்தூர் 165வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் நாஞ்சில் ஈஸ்வரபிரசாத்தை ஆதரித்து தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி எம்.பி ஆகியோர் வாணுவம்பேட்டை என்.எஸ்கே.சாலை, நங்கநல்லூர் இந்திரா நகர், ராம்நகர் பகுதிகளில் ஜீப்பில் நின்றபடி வாக்கு சேகரித்தனர். அப்போது இளங்கோவன் பேசியதாவது;பாராளுமன்ற, சட்டமன்றம் தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியை தந்தீர்கள். அதேபோல் உள்ளாட்சி தேர்தலில் வெற்றியை தரவேண்டும். இந்த தேர்தல் முடிவு முதலமைச்சர் ஸ்டாலினின் கரத்தை பலப்படுத்துவதாக இருக்கும். முதலமைச்சராக பதவி ஏற்றபின் எழுச்சிமிக்கவராக கடுமையாக உழைக்கிறார். உழைக்கின்ற தலைவராக ஸ்டாலின் உள்ளார். அமெரிக்க ஜனாதிபதி, இங்கிலாந்து பிரதமர் உள்பட உலக தலைவர்கள் 2 மாதத்துக்கு ஒருமுறை ஓய்வெடுப்பார்கள். ஆனால் ஒரு நாள் கூட ஓய்வெடுக்காமல் உழைப்பவர் ஸ்டாலின். இந்த 8 மாத ஆட்சியில் கட்சி வேறுபாடின்றி தமிழர்களுக்காக உழைக்கிறார்.  அதிமுக கட்சியாகவே இல்லை. பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர், ஏன் ஜெயலலிதாவையே மறந்துவிட்டார்கள். தலைவர்களை மறந்துவிட்ட அதிமுகவுக்கு பாடம் புகட்ட அதிமுகவை மக்கள் மறந்து சமாதி கட்டவேண்டும். உதயநிதி ஸ்டாலின் கூறியதுபோல் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி என 2 அமாவாசைதான் உள்ளது. ஸ்டாலின் மக்களை சந்திக்க பயப்படுகிறார் என்று எடப்பாடி கூறுவது தவறு. அவர் லட்சக்கணக்கான மக்களை காணொலி மூலம் சந்திக்கிறார். சட்டமன்றத்தில் கொடநாடு என்றதும் திருடனை போல் ஓடிச்சென்று எடப்பாடி பழனிசாமி சாலையில் உட்கார்ந்து  விடுகிறார். 2024ல் தேர்தல் வரும் என்று எடப்பாடி கூறுகிறார். நிச்சயமாக வராது. ஆனால் 2024ல் எடப்பாடி பழனிசாமி சிறையில் இருப்பார். கொட நாடு கொள்ளைக்கும் கொலைக்கும் அவர்தான் காரணம். இவ்வாறு பேசினார்.ஆர்.எஸ்.பாரதி எம்பி பேசும்போது, ‘’திமுக தந்த தேர்தல் வாக்குறுதிகளில் மகளிருக்கு இலவச பயணம் செய்யும் திட்டம் இந்தியாவுக்கே முன்மாதிரியான திட்டம். இந்த திட்டத்தை உ.பி.தேர்தலில் பஸ்களில் வயதானவர்களுக்கு இலவச பஸ் பாஸ் என்று பாஜ கூறி வருகிறது. வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரயில் திட்டம் ஜூலை மாதம் தொடங்கப்பட உள்ளது’ என்றார்.இதில் காங்கிரஸ் நிர்வாகிகள் ரங்கபாஷ்யம், சிவராமகிருஷ்ணன், பகுதி நிர்வாகிகள் ஐயம்பெருமாள், கோவிந்தராஜ், பி.எஸ் ராஜ், நேரு ரோஜா, செல்வம், எஸ்.வடிவேல், சுரேஷ்ஸ்ரீராம், மகாராஜன், ரவிக்குமார், எஸ்.ரமேஷ், ஜெய்கணேஷ், திமுக சார்பில் லியோ பிரபாகரன், ஆர்.பாபு, கிறிஸ்டோபர், சரவணன், ராஜ்குமார், எல்.ஐ.சி பாபு., மதிமுக சார்பாக கராத்தே பாபு, ஜி.திருநா உள்பட பலர் பங்கேற்றனர்….

You may also like

Leave a Comment

sixteen − 15 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi