கொசுவர்த்தி நெருப்பு பற்றி முதியவர் தீயில் கருகி சாவு

 

மதுரை, ஜூலை 23: மதுரையில், கொசு வர்த்தி நெருப்பு போர்வையில் பற்றியதால், முதியவர் தீயில் கருதி பரிதாபமாக பலியானார்.  மதுரை, கே.புதூர் சர்வேயர் காலனி பாண்டியர் நகர் 4வது தெருவை சேர்ந்தவர் பாக்கியம்(73). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கொசுத்தொல்லை அதிகமாக இருந்ததால், நள்ளிரவில் எழுந்து கொசுவர்த்தியை பற்ற வைத்தார்.

அப்போது அதிலிருந்து பறந்த நெருப்பு பொறிகள் அவர் படுத்திருந்த மெத்தை மற்றும் அணிந்திருந்த கைலியில் விழுந்ததால் தீப்பற்றியது.  இந்த தீ மளமளவென பற்றி எரிந்ததால், அவரது உடல் கருகியது. முதியவரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனின்றி பாக்கியம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் பன்னீர்செல்வம் அளித்த புகாரின் பேரில், திருப்பாலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்