கைகுழந்தையுடன் இளம்பெண் மாயம்

கருங்கல், நவ.4 : கருங்கல் அருகே திக்கணங்கோடு மணலிக் காட்டுவிளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் நிஷாந்த் (34). டெம்போ டிரைவர். இவரது மனைவி எல்சி (34). இவர்களுக்கு 11 வயதில் இரண்டு ஆண் குழந்தைகளும் , ஐந்து மாத ஆண் கைகுழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் இரண்டு தினங்கள் முன்பு எல்சி தனது கணவருக்கு போன் செய்து உடல் நிலை சரியில்லை. கருங்கல் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு செல்வதாக கூறியுள்ளார். நிஷாந்த் வீட்டிற்கு வரும் போது வீட்டில் மனைவியை காணவில்லை. மொபைல் போனில் தொடர்பு கொண்ட போது போனை வீட்டிலேயே வைத்து விட்டு சென்றது தெரியவந்தது. பல இடங்களில் தேடிப் பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. இது குறித்து நிஷாந்த் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை