Sunday, June 30, 2024
Home » கேரளாவில் 40 ஆயிரத்தை தாண்டும் கொரோனா பலி: சாவு பட்டியலில் சேர்க்க 15,000 விண்ணப்பம்

கேரளாவில் 40 ஆயிரத்தை தாண்டும் கொரோனா பலி: சாவு பட்டியலில் சேர்க்க 15,000 விண்ணப்பம்

by kannappan

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும், மாரடைப்பு உள்பட பல்வேறு காரணங்களால் மரணமடைந்து வருகின்றனர். ஆனால், கொரோனா பாதித்து குணமடைந்த பிறகு இறப்பவர்கள் கொரோனா மரண பட்டியலில் சேர்க்கப்படுவதில்லை. கொரோனா பாதிப்புக்கான உரிய ஆவணங்கள் இருந்தும் மரணமடைந்த ஏராளமானோர் இந்த பட்டியலில் சேர்க்கப்படவில்லை. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டன. அதில், ‘கொரோனா பாதித்து குணமடைந்த பிறகு ஒரு மாதத்துக்குள் அதன் பின்விளைவுகளால் இறப்பவர்களையும் கொரோனா மரண பட்டியலில் சேர்க்க வேண்டும். இறப்பவர்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்,’ ,’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, கொரோனா குணமாகி ஒரு மாதத்திற்குள் இறந்தவர்கள் பற்றி விவரங்களை கூறி, அவர்களின் குடும்பத்தினர் விண்ணப்பிக்கலாம் என கேரள சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. அதன்படி, தினமும் ஏராளமான விண்ணப்பங்கள் வருகின்றன. இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. …

You may also like

Leave a Comment

5 × five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi