திருவனந்தபுரம்: கேரளாவில் 9 மாதங்களுக்குப் பிறகு கடந்த மாதம் 1ம் தேதி 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்ட ஒரே மாதத்தில், மலப்புரம் மாவட்டம் மரமஞ்சேரி மற்றும் வன்னேரி மேல்நிலைப்பள்ளிகளில் 262 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மரமஞ்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் மட்டும் 148 மாணவர்களுக்கும், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத 39 ஊழியர்களுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல இங்கிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள பெரும்படப்பு வன்னேரி அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் 39 மாணவர்கள் மற்றும் 36 ஆசிரியர்களுக்கும் கொரோனா ஏற்பட்டுள்ளது….
கேரளாவில் 262 மாணவருக்கு கொரோனா
previous post