கேன்ஸ் திரைப்பட விழாவில் நடிகையின் சூட்கேஸ் மாயம்: நகைகள் தப்பியதால் நிம்மதி

கேன்ஸ்: கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்ற நடிகை பூஜா ஹெக்டேவின் சூட்கேஸ் மாயமான நிலையில், அவரது நகைகள் தப்பியதால் அவர் நிம்மதி அடைந்துள்ளார்.  பிரான்சில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவின் திரைப்பட நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் தெலுங்கு பட நடிகையான பூஜா ஹெக்டேவும் முதன்முறையாக இந்த விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவர் தனது அசத்தலான பாணியில் ஆடைகளை அணிந்து கலக்கினார். ஆனால், அவருக்கு சோகமான சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. ஃபிலிம் கம்பேயனுக்கு அவர் அளித்த பேட்டியில், ‘என்னுடைய அலங்கார ஒப்பனை பொருட்கள், உடைகள் அனைத்தையும் சூட்கேசில் வைத்திருந்தேன். கேன்ஸ் விழாவில் பங்கேற்கும் முன், எல்லா பொருட்களும் எங்களுடன் இருந்தது. ஆனால், உடைகள் இருந்த சூட்கேஸ் எங்கே போனது என்பது தெரியவில்லை. அதிர்ஷ்டவசமாக நான் கொண்டுவந்த நகைகள் அனைத்தையும் அணிந்திருந்ததால், அவை தப்பின. என்னுடன் வந்த எனது குழுவினர் பதற்றமாகவே இருந்தனர். அவர்களை எவ்வளவோ சமாதானப்படுத்தினேன். ஒரே குழப்பமான சூழ்நிலையில் இருந்தோம். காலை, மதியம் உணவு கூட சாப்பிடவில்லை. பகலில் சாப்பிட வேண்டிய உணவை இரவில் சாப்பிட்டேன். எனது சிகையலங்கார நிபுணர், மயக்கம் அடையும் நிலையில் இருந்தார். எப்படி எனது சூட்கேஸ் மாயமானது என்பது தெரியவில்லை’ என்றார். …

Related posts

ராகுல் காந்தி வெறுப்பு பேச்சுகளை பேசும் பாஜக தலைவர்களை பற்றி தான் விமர்சித்தார்.. இந்துக்களை அல்ல : தெளிவுபடுத்திய பிரியங்கா காந்தி!!

அம்பாலாவில் இருந்து டெல்லி சென்றுகொண்டிருந்த சரக்கு ரயிலின் பெட்டிகள் கவிழ்ந்து விபத்து

அரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்தில் சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தில் கவிழ்ந்து விபத்து..!!