கூவத்தில் வாலிபர் சடலம்

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் உள்ள கூவம் கால்வாயில், 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடப்பதாக ஆர்.கே.நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று,  வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு அனுப்பி வைத்தனர். இறந்தவரின் சட்டை பையில் ஒரு  துண்டு சீட்டு இருந்தது. அதில் ஜெயக்குமார் என்று எழுதப்பட்டிருந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரை யாரேனும் கொலை  செய்து கூவம் கால்வாயில்  வீசினார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா  என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு