கூலி தொழிலாளி தற்கொலை

மானூர், ஜூன்12: மானூர் அருகே உள்ள உக்கிரன்கோட்டை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன் மகன் வினோத்குமார் (34). சிப்காட்டில் கூலி வேலை செய்துவந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப பிரச்னை காரணமாக வினோத்குமாரின் மனைவி தனது தந்தை வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த வினோத்குமார், நேற்று விஷம் குடித்து மயங்கிய நிலையில் வீட்டில் கிடந்துள்ளார். உறவினர்கள் அவரை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். இதுகுறித்து மானூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்