கூலி தொழிலாளியிடம் வழிப்பறி செய்தவர் கைது

கோவில்பட்டி, ஆக. 17: கோவில்பட்டி அத்தைகொண்டான் 2வது தெருவை சேர்ந்த முருகன் மகன் கதிர் (35). கூலித்தொழிலாளியான இவர், மந்தித்தோப்பு ரோட்டில் நடந்து சென்ற போது, அவரை வழிமறித்த நபர் மதுகுடிக்க பணம் கேட்டு, மிரட்டி அவர் சட்டை பையில் வைத்திருந்த செல்போன் மற்றும் ரூ.500ஐ பறித்துக் கொண்டு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பியோடி விட்டார்.இதுகுறித்து கதிர் அளித்த புகாரின் பேரில், மேற்கு போலீசார் வழக்கு பதிந்து, இவ்வழக்கில் தொடர்புடைய சாஸ்திரி நகர் 4வது தெருவை சேர்ந்த கிருஷ்ணசாமி மகன் முத்துக்காளை (28) என்பவரை கைது செய்தனர்.

Related posts

கிராமத்தில் புகுந்த ஒற்றை யானை விரட்டியடிப்பு

சாமியார் கொலையில் மேலும் ஒருவர் கைது வள்ளிமலை அருகே நடந்த

₹3.50 கோடி ஜிஎஸ்டி பாக்கி தகவலால் வேலை தேடும் வாலிபர் அதிர்ச்சி நடவடிக்கை கோரி வேலூர் கலெக்டரிடம் புகார் பான் எண் மூலம் கோவையில் போலி நிறுவனம்