கூலியை உயர்த்த கோரி தீப்பெட்டி தொழிலாளர்கள் மறியல்

ஏழாயிரம்பண்ணை, டிச.1: கூலி உயர்வு வழங்கக்கோரி தீப்பெட்டி தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். சாத்தூர் மற்றும் சிவகாசி பகுதிகளில் தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு 20 சதம் போனஸ் வழங்க வேண்டும், அரசு அறிவித்த கூலி உயர்வை வழங்க வேண்டும் என கோரி நேற்று ஏழாயிரம்பண்ணையில் விருதுநகர் மாவட்டம் சிஐடியு தீப்பெட்டி பட்டாசு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

சாத்தூர் ஒன்றிய கன்வீனர் மனோஜ்குமார் தலைமை வகித்தார். போராட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் தேவா, மாவட்ட செயலாளர் பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இதனால் ஏழாயிரம்பண்ணை சாத்தூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்படைந்தது. போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை