கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கும் மேளா

தூத்துக்குடி, ஜூலை 26: தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் உடன்குடி, சாத்தான்குளம் மற்றும் வெங்கடேஸ்வரபுரம் ஆகிய 3 கிளைகளில் கடன் வழங்கும் மேளா நடைபெற்றது. இதில் மகளிர் சுய உதவி குழுக்கள், வியாபாரிகள், மகளிர் தொழில் முனைவோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ரூ.2 கோடியே 36 லட்சத்திற்கு கடன் தொகையை தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் நடுக்காட்டு ராஜா வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வங்கி பொதுமேலாளர் சரவணன், முதன்மை வருவாய் அலுவலர் விஜயன், கிளை மேலாளர்கள், மனோகரன், மேரிரோஸ்லெட், முருகன் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

துறையூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் 326 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்

கண்ணுக்குழி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடம் துவக்கம்

நெல்லில் நவீன ரக தொழில் நுட்ப பயிற்சி