கூட்டுறவு சங்கத்தில் ₹38 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல், ஆக. 30: நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்துக்கு நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் 1,500 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். விவசாயிகள் முன்னிலையில், கூட்டுறவு சங்க அலுவலர்கள் ஏலம் நடத்தினர். ஆர்சிஎச் ரகம் பருத்தி குவிண்டால் ₹7,189 வரையும், சுரபி ரகம் பருத்தி குவிண்டால் ₹8,600 வரையும், மட்ட ரகம் பருத்தி குவிண்டால் ₹5,595 வரையும் ஏலம் போனது. ஒட்டு மொத்தமாக நேற்று நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் ₹38 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது என கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்