கூட்டுறவு கடன் சங்கம் கட்டுவதற்கு இடம் தேர்வு

ஊத்தங்கரை, ஏப்.21: ஊத்தங்கரை அடுத்த கல்லாவியில், கூட்டுறவு கடன் சங்க கட்டிடம் கட்டுவதற்கு இடம் ஆய்வு செய்யப்பட்டது. ஊத்தங்கரை அடுத்த, கல்லாவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு, புதிய சங்க கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று கட்டிடம் கட்டும் இடத்தினை, திருவண்ணாமலை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதிலட்சுமி நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் இந்து சமய அறங்காவலர் குழு கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் ரஜினிசெல்வம், ஊத்தங்கரை இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் பால்வண்ணன், கல்லாவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் நாகராசன் ஆகியோர், சங்க கட்டிடம் கட்டும் அரசு நிலத்தை பார்வையிட்டு பரிந்துரைச்சான்று வழங்க ஒதுக்கீடு செய்து ஆய்வு செய்தனர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை