கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்கள் தவிர திமுக போட்டியிடும் இடங்களை முறைப்படுத்தி ஜன. 31க்குள் அனுப்பி வைக்க திமுக தலைமை உத்தரவு

சென்னை: ஜனவரி 31க்குள் கூட்டணி கட்சிகளுடன் இடப்பங்கீட்டை முடிவு செய்ய மாவட்ட செயலாளர்களுக்கு திமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்கள் தவிர திமுக போட்டியிடும் இடங்களை முறைப்படுத்தி ஜனவரி 31க்குள் அனுப்பி வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கழகத் தலைவர் அவர்கள் தலைமையில் 27.1.2022 அன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள் – நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவின் அடிப்படையில், நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சியினர் போட்டியிடும் வாடீநுப்புள்ள இடங்களை அவர்களை அழைத்துப் பேசிட வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.கழகத் தலைவர் அவர்களின் அறிவுரைப்படி, கடந்த நாடாளுமன்ற/சட்டப்பேரவைத் தேர்தலில் நம்முடையகூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன் சுமூகமாக கலந்தாலோசித்து முடிவு செய்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பேச்சுவார்த்தை மூலம் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களை தவிர, கழகம் போட்டியிடும் இடங்களை முறைப்படுத்தி, அவற்றில் போட்டியிடும் கழக வேட்பாளர் பெயர் பட்டியலை, 31-1-2022ஆம் தேதிக்குள் தலைமைக் கழகத்துக்கு அனுப்பி வைத்திட மாவட்டக் கழகச் செயலாளர்/பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்….

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு