கூடுவாஞ்சேரி அருகே பள்ளி மாணவி திடீர் மாயம்

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அருகே தைலாவரம், நரசிம்மா நகர், குருசாமி தெருவை சேர்ந்தவர் விஜயகாந்த் (37). லாரி டிரைவர். இவருக்கு மனைவி, 2 மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது மூத்த மகள் ஜனனி (16), நந்திவரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 5ம் தேதி காலை திடீரென மாயமாகி விட்டார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் நேற்று மாணவியின் தந்தை புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியை யாரேனும் கடத்தி சென்றார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். மேலும், அப்பகுதி சிசிடிவி காமிரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து விசாரிக்கின்றனர்….

Related posts

சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம் முருகன் கோயிலில் ரூ.10.29 லட்சம் உண்டியல் காணிக்கை