கூடுதல் விலைக்கு மது விற்றவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூன் 10: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, தென்கரைகோட்டையில் இருந்து, வடகரை செல்லும் சாலையில், கோபிநாதம்பட்டி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக டூவீலரில் வந்த நபரை நிறுத்தி, விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் வாச்சாத்தி பகுதியை சேர்ந்த சிவக்குமார் (42) என்பதும், அவர் மதுபான பாட்டில்களை அதிக விலைக்கு விற்க முயன்றதும் தெரிந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்