கூடுதல் வசதி ஏற்படுத்த வேண்டும் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம்

கரூர், ஜூன் 24: கரூர் கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் ஜூன் 2024ம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 27 (வியாழன்) அன்று காலை 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாது விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. அப்போது, கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, முகக் கவசம் அணிந்து கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு