கூடலூர் அருகே காட்டு யானைகளைப் பிடிக்கும் பணி தீவிரம்: ஓவேலி பகுதியில் 4வது நாளாக வனத்துறை தேடுதல் வேட்டை

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே பெண் உள்ளிட்ட 2 பேரை தாக்கி கொன்ற காட்டு யானைகளை பிடிக்க கூடுதலாக கும்கி யானைகள் வரவேற்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. கூடலூர் அடுத்த ஓவேலி பேரூராட்சி உட்பட அரூற்று பாறை மற்றும் ஆறாம் பகுதிகளில் அன்னையில் காட்டு  யானைகள் தாக்கியதில் பெண் உள்ளிட்ட 2 பேர் உயிர் எழுந்தனர். இதை அடுத்து அந்த யானைகளை பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் 4 நாளாக ஈடுபட்டு வருகின்றனர். கும்கி யானைகளும் களம் இறக்கப்பட்டனர்.
இந்நிலையில் மேலும் சில கும்கி யானைகளை கொண்டு வந்து பிடிக்கும் நடவடிக்கையில் தீவிர படுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. யானைகளால் வெளியே  நடமாடவே அச்சமாக இருப்பதால் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளார். மேலும் வந்ததில் இருந்து ஊருக்குள் புகுறும் யானைகளால் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதால் பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.

Related posts

காந்தி ஜெயந்தி விடுமுறை: ஞாயிறு அட்டவணைப்படி நாளை புறநகர் ரயில்கள் இயக்கம்

வட மாநில தொழிலாளர்களை குறிவைத்து போலி பிராண்டட் செல்போன்கள் விற்பனை

தூத்துக்குடி – சென்னை இடையே பகல் நேர ஜன சதாப்தி ரயில் இயக்க வேண்டும்: பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை