கூடலூரில் போலீஸ்காரரிடம் வாக்கி டாக்கியை திருடிய வாலிபர் கைது

கூடலூர் : நீலகிரி மாவட்டம் கூடலூர் போலீசாரிடம் வாக்கி டாக்கியை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். கூடலூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளவர் சந்திரசேகர். இவர் நேற்று முன்தினம் இரவு பழைய பஸ் நிலையம் கள்ளிக்கோட்டை சாலை சிக்னல் பகுதியில் பணியில் இருந்தார். அப்பகுதியில் இருந்த இவரது காரில் வாக்கி டாக்கி மாயமானது.  இது குறித்து நேற்று காலை அதே போலீஸ் நிலையத்தில்  புகார் அளித்தார். இதனையடு்த்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை போலீசார் நேற்று ஆய்வு செய்தனர். இதில் சம்பவத்தன்று இரவு சுமார் ஒரு மணி அளவில் சந்திரசேகர் காரில் இருந்து இளைஞர் ஒருவர் வாக்கிடாக்கியை திருடிச்செல்லும் காட்சி பதிவாகி  இருந்தது.இதனையடுத்து அந்த வாலிபரை போலீசார் தேடி வந்தனர்.நேற்று மாலை கள்ளிக்கோட்டை சாலையில் வைத்து அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் காசிம் வயல் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (23) என்பதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து வாக்கி டாக்கியைபோலீசார் பறிமுதல் செய்தனர்….

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்