கூடலூரில் எஸ்டிபிஐ கண்டன ஆர்ப்பாட்டம்

கூடலூர், அக். 28:பாலஸ்தீன மருத்துவமனை மீது இஸ்ரேல் பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தியதை கண்டித்து, நேற்று தமிழகம் முழுவதும் ஜிம்மா தொழுகை முடித்து விட்டு இஸ்ரேலை கண்டித்து பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக கூடலூர் எஸ்டிபிஐ கட்சியின் நகர தலைவர் சாகுல் அமீது தலைமையில் முஹைதீன் ஆண்டகை பள்ளிவாசல் அருகில் தொழுகை முடித்த பின்பு, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயற்க்குழு உறுப்பினர் காதர் கலந்து கொண்டார். ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதித் தலைவர் அஜ்மீர்கான் பேசினார். நகரத்துணைத் தலைவர் சபீர்கான், நகரச்செயலாளர் நாகூர் மீரான் மற்றும் கட்சியினர், ஜமாத்தினர் கலந்து கொண்டு இஸ்ரேலுக்கு எதிராக கண்டன கோஷங்களை பதிவு செய்தனர். ஆர்ப்பாட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கண்டிக்கும் விதமாக சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தி போர் குற்றவாளியாக அறிவித்திட ஐ.நா மன்றத்தை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். நகர செயலாளர் நாகூர் மீரன் நன்றி கூறினார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை