அரூர், ஏப்.26: அரூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன், கோயிலில் திருமணம் நடந்துள்ளது. இதுகுறித்து, அரூர் அனைத்து மகளிர் போலீசார், குழந்தை திருமண தடை சட்டத்தில் வழக்குப்பதிந்து, திருமணத்துக்கு ஏற்பாடு செய்த, சித்தேரியை சேர்ந்த குமார், (35) கோவிந்தராஜ், (27) ஆண்டி, (42) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.