குழந்தையுடன் இளம்பெண் மாயம்

சேலம், ஆக.3: சேலம் ஓமலூர் மூங்கில்பாடி பகுதியை சேர்ந்தவர் காந்த். இவரது மனைவி சுருதி (22). இவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. நான்கு வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்தநிலையில் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சுருதி குழந்தையுடன் தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில், கடந்த 3 நாட்களுக்கு திருச்செங்கோட்டில் உள்ள பாட்டி வீட்டுக்கு செல்வதாக குழந்தையுடன் புறப்பட்டார். ஆனால் அவர் அங்கு செல்லாதது தெரிந்தது. அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது பெற்றோர் கருப்பூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related posts

மெட்ரோ ரயில் பணியால் ஏற்படும் நெரிசலை குறைக்கும் வகையில் சென்னையில் புதிய இணைப்பு சாலைகள்: சாத்தியக்கூறுகள் ஆய்வு

புழல் சிறையில் கைதிகளை சந்திப்பதற்கு புதிய நடைமுறை எதிர்த்து வழக்கு

ெசன்னை துறைமுகத்தில் இருந்து ₹35 கோடி மதிப்பு எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை கடத்திய வழக்கில் மாநகர பஸ் டிரைவர் கைது