கிருஷ்ணகிரி, செப்.26: கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் தனசேகரன் (29), கூலித்தொழிலாளி. இவரது மனைவி தீபா (22). இவர்களுக்கு அட்லீக் (3) என்ற மகன் உள்ளார். கடந்த 24ம் தேதி மாலை தீபா குழந்தையுடன் வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து தனசேகரன், கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதில், அதே பகுதியில் வசித்து வரும் தனியார் வங்கி ஊழியர் சிபிராஜ் (21) என்பவர் கடத்தி சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.