குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம்

 

சிங்கம்புணரி, ஜூலை 27: சிங்கம்புணரி பேரூராட்சியில் குழந்தைகள் நல பாதுகாப்பு குறித்து கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் அம்பலமுத்து தலைமை வகித்தார். துணைத்தலைவர் இந்தியன் செந்தில், செயல் அலுவலர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மணிமேகலை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.

இதில், குழந்தைகள் கடத்தல், குழந்தை திருமணம், சட்டத்திற்கு புறம்பாக குழந்தைகளை தத்து வழங்குதல், குழந்தை பாலியல் தொல்லை, உள்ளிட்ட குழந்தை பாதுகாப்பு குறித்து உரையாற்றினார்கள். நிகழ்ச்சியில் எஸ்ஐ நாச்சிமுத்து, சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயன் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி