குளித்தலை, ஜூன்12: கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா வைகைநல்லூர் கிராமம் மயிலாடி ரேக்ளா ஷோக் தாரிகள் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்திய மாபெரும் குதிரை, மாடு எல்கை பந்தயம் குளித்தலை மணப்பாறை சாலை மயிலாடி வாய்க்கால் பாலம் அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது.
இதில் பெரிய குதிரை, இரட்டை மாடு, பெரியஒத்தை மாடு, சிறியகுதிரை, சிறியஒத்தை மாடு, புதிய குதிரை, தேன் சிட்டு மாடு, சைக்கிள் கொக்கி ரேஸ் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் முதல் மூன்று பரிசுகளை பெற்ற மாடு, குதிரை, சைக்கிள் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியில் கரூர், திருச்சி, தஞ்சாவூர், சேலம்,நாமக்கல், கோயம்புத்தூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.