குளத்தூர் அரசு பள்ளியில் மாணவர் காவல் படை துவக்கம்

குளத்தூர், ஜூலை 5: குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர் காவல் படை துவக்க விழா நடந்தது. தலைமை ஆசிரியர் சற்குணராஜ் தலைமை வகித்து பேசினார். உடற்கல்வி ஆசிரியர் கனகராஜ் முன்னிலை வகித்தார். குளத்தூர் எஸ்ஐ முத்துராஜா, மாணவர் காவல் படையின் சிறப்பம்சம் குறித்து பேசினார். மாணவர் காவல் படையில் சுமார் 62 மாணவர்கள் தங்களை இணைத்து கொண்டனர். ஒருங்கிணைப்பு ஆசிரியராக உடற்கல்வி ஆசிரியர் கனகராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் ஒவ்வொரு வாரமும் மாணவர் காவல் படைக்கு என சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. போலீஸ்காரர் பாலமுருகன் நன்றி கூறினார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை