குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

புழல்: செங்குன்றம் அடுத்த அலமாதி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ். இவரது மகன் கவியரசு (8) அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், நேற்று முன்தினம்  வெளியே சென்ற அவனது பெற்றோர் மாலையில் வீடு திரும்பினர். அப்போது, தங்கள் மகன் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அவனை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதுகுறித்து, சோழவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இரவு 11 மணியளவில் அலமாதி குளத்தில் ஒரு சிறுவன் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரித்தனர். இதில், அது காணாமல் போன சிறுவன் கவியரசு எனத் தெரியவந்தது. பின்னர், சடலத்தை, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். இப்புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிந்து, நீச்சல் தெரியாததால் சிறுவன் குளத்தில் மூழ்கி இறந்தானா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?  என விசாரிக்கின்றனர்….

Related posts

பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம் வடசென்னை மாவட்ட பாஜ செயலாளர் கைது: தனிப்படை போலீசார் அதிரடி

சென்னையில் கடந்த 3 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த 6,876 ஆதரவற்றோர் மீட்பு

பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே உள்ள சாலையில் மீண்டும் கடல் சீற்றத்தால் மணல் திட்டுகள்:  வாகன ஓட்டிகள் அவதி  பாலம் அமைத்து தர கோரிக்கை