குலசேகரம் எஸ்ஆர்கே பள்ளியில் நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பாராட்டு

குலசேகரம்,ஜூன் 8: குலசேகரம் எஸ்ஆர்கே இண்டர்நேஷனல் சீனியர் செக்கண்டரி பள்ளியும், எஎம்ஐஇ அகாடமியும் இணைந்து நீட் தேர்வு பயிற்சியளித்து வருகிறது. தற்போது நீட் தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் இந்த பள்ளியில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்ற அனைத்து மாணவர்களும் வெற்றிப் பெற்றுள்ளனர். மாணவர் ஆட்செலின் சுனித் 720 க்கு 663 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடம் பிடித்துள்ளார். மாணவி அக்சரா 592 மதிப்பெண் பெற்றுள்ளார். இவர்களை எஸ்ஆர்கே கல்வி குழும தலைவர் ராதாகிருஷ்ணன், இயக்குநர் சுதாதேவி, முதல்வர் லதாதேவி, எ.எம்.ஐ.இ அகாடமி இயக்குநர் அனந்தூ மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை