குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 154 வாகனங்கள் ரூ.7 லட்சத்திற்கு ஏலம்

 

திருவாரூர், ஆக. 9: திருவாரூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 154 வாகனங்கள் ரூ 7 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டன. திருவாரூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் மது கடத்தல் தொடர்பான வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நேற்று ஆயுதப்படை மைதானத்தில் எஸ்.பி ஜெயகுமார் தலைமையில் பொது ஏலம் விடப்பட்டன.

இதில் 185 இருசக்கர வாகனங்களில் 154 வாகனங்கள் ஏலம் எடுக்கப்பட்டன. இதில் பொதுமக்கள் மற்றும் வாகனத்தின் உரிமையாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நிலையில் வாகனத்தின் உரிமையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு பொது ஏலம் விடப்பட்டது. அதன் மூலம் ஏலத்தொகையான ரூ 7 லட்சத்து 69 ஆயிரத்து 552 அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக எஸ்.பி அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பொது ஏலத்தின் போது கூடுதல் எஸ்.பி ஈஸ்வரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி