குறை தீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல் வழி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் 2 பவுன் செயின்பறிப்பு

 

ஒரத்தநாடு, ஜூலை 22: ஒரத்தநாடு அருகே புலவன்காட்டில் வழி கேட்பது போல் நடித்து மூதாட்டியிடம் செயினை பறித்து விட்டு தப்பிஓடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே புலவன்காடு பகுதியை சேர்ந்த வசந்தா (75). இவர் சம்பவத்தன்று பாப்பாநாடு கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் இரண்டு பேர் பைக்கில் வந்து தஞ்சாவூருக்கு எப்படி செல்வது என்று வழி கேட்பது போல் வசந்தாவிடம் பேச்சு கொடுத்தனர் அப்போது ஒரு நபர் வசந்தாவை இறுக்கி பிடித்துக்கொள்ள மற்றொரு நபர் இரண்டு பவுன் செயினை பறித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் போராடிய வசந்தாவை கழுத்தை நெறித்த்துள்ளனர். இதில் வசந்தா மயக்கமடைந்து கீழே விழுந்தார் அப்போது மர்மநபர்கள் இருவரும் ைபக்கில் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து வசந்தா கொடுத்த புகாரின் பாப்பாநாடு இன்ஸ்பெக்டர் இளங்கோவன் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து