குறைதீர் நாளில் நலத்திட்ட உதவி வழங்கல்

சிவகங்கை, செப்.17: சிவகங்கை கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் இலவச வீட்டுமனைப் பட்டா, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 185 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் ஆஷாஅஜித் அறிவுறுத்தினார். இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் கீழ் 48 பயனாளிகளுக்கு ரூ.8.70 லட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்