குறுக்கெழுத்துப்போட்டி-40 விடைகள் வெற்றி நமதே திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு

 

பல்லடம்:பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பல்லடம் அருகேயுள்ள பொங்கலூரில் திருப்பூர் புறநகர் வடக்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகள் தேர்தல் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தேர்தல் ஆணையராக கழக தேர்தல் பணிக்குழு துணை செயலாளர் கோவை சேதுபதி தலைமை வகித்தார்.

இதில் மாவட்ட அவைத் தலைவராக சண்முகசுப்பிரமணியம், செயலாளராக புத்தரச்சல் பி.கே. மணி, பொருளாளராக ஆர்.ஆர்.ரவி என்னும் ரவிச்சந்திரன் ( பல்லடம் ஒன்றிய கவுன்சிலர்), மாவட்ட துணை செயலாளர்களாக பழனிசாமி (கோடங்கிபாளையம் ஊராட்சி தலைவர்),செந்தில்குமார், ஜே.சத்யா பாலசுப்பிரமணியம்(பொங்கலூர் ஊராட்சி தலைவர்),சாமிநாதன், தலைமை செயற்குழு உறுப்பினராக கணேஷ்கார்த்தி, பொதுக்குழு உறுப்பினர்களாக பாலசுப்பிரமணியம்,சோனைமுத்து,இளங்கோவன்,மகேஷ்பாபு, ராஜேந்திரன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாகிகளுக்கு மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரைவைகோ தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். புதிய நிர்வாகிகளை பொள்ளாச்சி தொகுதி முன்னாள் எம்.பி. டாக்டர் சி.கிருஷ்ணன்,பல்லடம் நகர செயலாளர் வைகோ பாலு,ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணியம்,பொங்கலூர் ஒன்றிய கழக செயலாளர்கள் முத்துசாமி, அப்புசாமி உள்பட பலர் வாழ்த்தினர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி