குரூப் 4 தேர்வு வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகம் வழங்கி கலெக்டர் பாராட்டு

 

கரூர், ஆக. 9: கரூர் மாவட்ட மைய நூலகத்தில் பயிற்சி பெற்று குரூப் 4 தேர்வில் வென்று, பணிக்கான உத்தரவுகளை பெற்றவர்களை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பாராட்டினார். கரூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கலங்கரை விளக்கம் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 4 போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரித் தேர்வுகள் கரூர் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்புகளில் பங்கேற்று பயின்ற அருண்குமார் (இளநிலை உதவியாளர்), லாவண்யா (வரித்தண்டலர்), வெங்கடேஷ் (இளநிலை உதவியாளர்), ஜெயபிரகாஷ் (இளநிலை உதவியாளர்), தீபன் (இளநிலை உதவியாளர்), இளவரசன் (இளநிலை உதவியாளர்), விக்னேஷ் (கிராம நிர்வாக அலுவலர்) ஆகியோர் தேர்வில் வெற்றி பெற்று பணி நியமன ஆணைகளை பெற்றுள்ளனர். இவர்களை, கரூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், நினைவுப் பரிசு வழங்கி பாராட்டி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட திட்ட இயக்குநர் வாணி ஈஸ்வரி, மாவட்ட நூலக அலுவலர் சிவக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு