குரூப் 4 தேர்வு எழுத சென்ற பட்டதாரி பெண் மாயம்

கடலூர், ஜூன் 11: கடலூர் முதுநகர் அருகே உள்ள வசந்தராயன்பாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கருணாகரன் மகள் யுவ (21). இவர் பிஏ படித்து முடித்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இதில் யுவ கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு எழுதுவதற்காக வீட்டைவிட்டு சென்றார். பின்னர் அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து அவர்கள் கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி