குருவாயூர் கோவில் உண்டியல்கள் திறப்பு ரூ.7.36 கோடி வசூல்

 

பாலக்காடு,ஜூன்28: கேரளாவில் பிரசித்தி பெற்ற குருவாயூர் கோவில் ஜூன் மாத உண்டியல் வருவாய் 7 கோடியே 36 லட்சத்து 47 ஆயிரத்து 345 ரூபாய் கிடைத்தது. மேலும் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய 3 கிலோ 322 கிராம் தங்கமும்,16 கிலோ 670 கிராம் வெள்ளியும் கிடைத்தது.

எஸ்.பி.ஐ., இ-பே உண்டியல் மார்க்கமாக 2 லட்சத்து 81 ஆயிரத்து 696 ரூபாயும், யூ.பி.ஐ., வங்கி இ-பே உண்டியல் மூலமாக 17 ஆயிரத்து 266 ரூபாயும் வருவாய் வந்துள்ளன. மேலும் செல்லாத 2000 ரூபாய் நோட்டுக்களில் 23ம்,, 1000 ரூபாய் நோட்டுக்களில் 56ம், 500 ரூபாய் நோட்டுக்களில் 48ம் உண்டியலில் கிடைத்தன. உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணியில் எஸ்.பி.ஐ., வங்கி அதிகாரிகள் ஈடுபட்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை